Tuesday 27 December 2016

காட்டுமிராண்டி நாங்க..














வெங்காயம் உரிக்கும்
கெழவி வளத்த
காங்கேயம் காளை
தைரியம் எவனும் இருந்தா
புடிடா வால

அலங்காநல்லூரு மண்ணு
ஆம்பள எல்லாம் வாங்க
ஆலத்தி சுத்த போல
கொம்பால குத்திப்போவான்

தம்பிக்கூட விளையாட
தடை போடுவீங்க
சத்தமா பேசிப்புட்டா
பொடா போடுவீங்க
ஆனா,

காட்டுமிராண்டிங்க நாங்க…

காட்ட எல்லாம் அழிச்சுப்புட்டு
கான்கிரீட்டு சுடுகாட்டுல
நாய் வளர்த்து நலம் பேனும் 
நீங்களெல்லாம் மனுஷங்க தான்

காள மாட்ட அய்யனாரா
கழுவி குழுப்பாட்டி
தம்பி போல விளையாடும்
நாங்களெல்லாம் காட்டுமிராண்டிங்கதான்..



No comments:

Post a Comment

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...