Monday 5 December 2016

அம்மா



















பிள்ளைப்பருவத்தில் தந்தையில்லை
பிழைக்கும் பருவத்தில் தாயுமில்லை
காதல் பருவத்தில் கணவணில்லை
தாயாகும் பருவத்தில் மட்டும்
தழைத்தோங்க எத்தனை பிள்ளைகள்

இருவரின் அன்பு தான்- ஒரு
பெண்ணை அம்மாவாக உயர்த்தும்
இவள் ஒருத்தியின் அன்பு மட்டும்
இவளை அம்மா என உயர்த்தியது

வீம்பிற்கு பல செய்தாள்
நல் விதைகளும் சில விதைத்தாள்
ஆண்களின் கர்வத்தெல்லாம்
அடக்கிய ஆண்டாள்
அரையடி இடைவெளி
அவள் ஆண்மையின் அடையாளம்

புகழாரம் பாடும் நான்
இன்றும் இவரை
ஒரு தலைவராய் வெறுக்கின்றேன்
எனினும்
மரணத்தை நீ தழுவையிலே
மரணம் கூட உனக்கு
எளிதாக இல்லையே எனும்
வருத்தத்தில் வாடுகிறேன்

சக மனிதனாக…

No comments:

Post a Comment

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...