Friday 1 April 2016

முட்டாள்கள் தினம்...

இயற்கை இன்னிசை இசைக்க
இளங்காற்றோ இந்நேரம் இதமாய் வீச
ஏதோ என் மனம் என்னவள் வருகையை
எதிர்பார்த்து ஏங்க

விழிகள் படபடக்க பின்னே திரும்பினால்
விழிமுன் வந்தது
வாழ்க்கையின் பயனே
வடிவாய் இப்பெண்வழி

ஈரிமை நடுவே ஒரு சொட்டு
உதிரம் போல சிறிதாய் செந்திலகம்
கவப்பையின் அழகை அம்முகம் சுமந்திட
என்ன தான் தவம் செய்தனவோ?

இப்பெண்மையிடும்
கண்மையிலே
உண்மையிலே தோற்றுப்போகும்
ஆண்மையின் கர்வம்

கர்வமிழந்து உன் கால்தடங்கள்
பின் தொடர புறப்பட்ட தினமன்றோ
இத்தினம்..
தற்செயலோ என்னவென்றால் இத்தினம் தான்

முட்டாள்கள் தினமும்…!!!  

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...