Wednesday 25 July 2018

முரண்படு







இந்த வாழ்க்கை அழகான முரண்களால் ஆனது. இதயம் மூளையுடன் கொள்ளும் முரணும், மூளை இதயத்துடன் கொள்ளும் முரணும் தான் இந்த மனித உடலின் Engine.

முரண்களை கொண்டாடுங்கள். முரண்படுவதால் விமர்சிக்கப்படலாம். ஆனால், அந்த முரண்கள் தான் உங்கள் அறிவை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்கின்றது.

தன்னைத் தானே ஒருவன் முரண்படாமல் எக்காலமும் இருக்ககூடமாயின் அவன் முட்டாளாகத்தான் இருக்கின்றான் என்பதை அறியாமலேயே அவன் அத்தகைய வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள தொடங்கிவிட்டான். அது அவன் சுய உரிமை என்பதில் மாற்று கருத்தில்லை.

முரண்களை கண்டு மனிதர்கள் அச்சப்படுவதும், அதை தனது Guilty Consciousness கொண்டு அனுகுவதும் தேவையற்றது. அந்த முரண்கள் காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்றது போல தன்னைத்தானே உருமாற்றிக்கொள்கிறது என்ற சூழலிய தத்துவத்தையும், காலத்தின் மாற்றத்தையும் நாம் உணர வேண்டும்.

முரண்படுவதற்கு அஞ்சாதீர்கள்,
முரண்பாடுகள் ஒரு ஜென் நிலைக்கான தொடக்கம்.

It's a Path of Paradox.


ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...