Saturday 7 November 2015

அவளும்... மழையும்...

மேகங்கள் கண் மையிட்டு
மண் வாசம் நாசி தொட்டு
மனதோடு மேளமிட்டு
எனை வந்து நனைக்கிறது
யான் காண ஏங்கும்
என்னவள் போல் மாமழையும்

என் இதயத்தின் காதல் நீரோடை
உட்கொண்ட-உன் இதயமுகில்கள்
பாரம் தாங்க இயலாமல்-என் மீதே
காதல் மழையாய்  பெய்ததடி காதலியே

மனிதனை மந்தமாக்கி
உலகை இரசிக்கச் செய்வதில்
மனதை மயக்கச் செய்வதில்
காதலும் மழையும் ஒன்றே

அன்பும் இறையும்
அவளும் மழையும்
இவையே போதும்

இவண் வாழ்ந்திடவே!!






ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...