Tuesday 27 December 2016

காட்டுமிராண்டி நாங்க..














வெங்காயம் உரிக்கும்
கெழவி வளத்த
காங்கேயம் காளை
தைரியம் எவனும் இருந்தா
புடிடா வால

அலங்காநல்லூரு மண்ணு
ஆம்பள எல்லாம் வாங்க
ஆலத்தி சுத்த போல
கொம்பால குத்திப்போவான்

தம்பிக்கூட விளையாட
தடை போடுவீங்க
சத்தமா பேசிப்புட்டா
பொடா போடுவீங்க
ஆனா,

காட்டுமிராண்டிங்க நாங்க…

காட்ட எல்லாம் அழிச்சுப்புட்டு
கான்கிரீட்டு சுடுகாட்டுல
நாய் வளர்த்து நலம் பேனும் 
நீங்களெல்லாம் மனுஷங்க தான்

காள மாட்ட அய்யனாரா
கழுவி குழுப்பாட்டி
தம்பி போல விளையாடும்
நாங்களெல்லாம் காட்டுமிராண்டிங்கதான்..



Saturday 17 December 2016

கண்ணம்மா- என் குழந்தை



















கண் அசர்ந்து நான்
உறங்கச் செல்வேன்
கண் வியர்க்க
அருகில் வருவாள்
கதைகள் பல
அவள் சொல்வாள்
கட்டியணைத்து
கண் துடைப்பேன்
குழல் கோதி
உறங்க வைப்பேன்

கண்ணம்மாவை முத்தமிட
சத்தமின்றி நான் செல்வேன்
முகம் நடுவே நுழைத்திடுவாள்
அவளுக்கான முத்தத்தை
இவள் திருடிச் சென்றிடுவாள்

கண்ணம்மாவென நான் அழைக்கும்
இன்னுமொரு பெண்ணென்றால்

கண்ணம்மா- என் குழந்தையென்பேன்….


Monday 5 December 2016

அம்மா



















பிள்ளைப்பருவத்தில் தந்தையில்லை
பிழைக்கும் பருவத்தில் தாயுமில்லை
காதல் பருவத்தில் கணவணில்லை
தாயாகும் பருவத்தில் மட்டும்
தழைத்தோங்க எத்தனை பிள்ளைகள்

இருவரின் அன்பு தான்- ஒரு
பெண்ணை அம்மாவாக உயர்த்தும்
இவள் ஒருத்தியின் அன்பு மட்டும்
இவளை அம்மா என உயர்த்தியது

வீம்பிற்கு பல செய்தாள்
நல் விதைகளும் சில விதைத்தாள்
ஆண்களின் கர்வத்தெல்லாம்
அடக்கிய ஆண்டாள்
அரையடி இடைவெளி
அவள் ஆண்மையின் அடையாளம்

புகழாரம் பாடும் நான்
இன்றும் இவரை
ஒரு தலைவராய் வெறுக்கின்றேன்
எனினும்
மரணத்தை நீ தழுவையிலே
மரணம் கூட உனக்கு
எளிதாக இல்லையே எனும்
வருத்தத்தில் வாடுகிறேன்

சக மனிதனாக…

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...