Monday 19 September 2016

கண்ணம்மா - என் காதலி
















எண்ணங்கள் எழுத்தின் வழி
கண்ணம்மா
ஏதும் நான் உரைத்ததில்லை

உள்ளத்தின் உணர்ச்சியெல்லாம்
கண்ணம்மா
உன் கண்களினுள் புதைத்துவிட்டேன்

ஆசைகள் தோன்றுதடி
கண்ணம்மா
அதிகாலை குழல் முடிகையில்

காதலின் வாய்மொழி
கண்ணம்மா
நின்றன் கண்களில் கண்டுகொண்டேன்

யாதொரு இன்பமும்
கண்ணம்மா
என் யாக்கை விரும்புதில்லை

எத்தனை கொடுமைகளடி
கண்ணம்மா
எனை விட்டு சென்றிலன் நீ





ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...