Thursday 28 May 2015

மனிதம் எங்கே ??






பௌத்த மதத்தின் நெறிமுறைகள் என்னவென்று எவரேனும் அறிவீரா ?
இவை எட்டு தான் பிரதான நெறிமுறைகள்.

நற்காட்சி - Right View
நல்லெண்ணம் - Right Thought
நன்மொழி - Right Speech
நற்செய்கை - Right Conduct
நல்வாழ்க்கை - Right Livelihood
நன்முயற்சி - Right Effort
நற்கடைப்பிடி - Right Mindfulness
நற்தியானம் - Right Meditation

உலக மதங்களிலேயே மனிதத்திற்கான அன்பையும் அமைதியையும் போதிக்கும் ஒரு உன்னதமான மதம் பௌத்தம். 
ஆனால் இம்மதத்தைக் கொண்டு பல்லாயிரக்கணக்கான உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நமக்கு சகோதர நாடுகளாக திகழும் சிலோன் மற்றும் மியான்மரில் நடந்தேறும் படுகொலைகளையும், இன அழிப்பையும் பற்றி தான் பேசுகிறேன்.
ஆண்டாண்டு காலமாக இந்த இன அழிவு இரண்டு நாடுகளிலுமே
நிகழ்கிறது,

ஒரு நாட்டிற்கு தோள் கொடுத்து உதவினோம்,
பல இலட்சம் தமிழர்கள் மாண்டனர்…


மியான்மருக்கோ
செவி சாய்க்காமல்,
கண் திறக்காமல் இருக்கின்றோம்.

இரு நாடுகள் மீதும் இந்தியாவின் பார்வை என்ன ?
ஒருவன் தமிழன் தானே?
மற்றொருவன் இஸ்லாமியன் தானே?

அனைவரும் மனிதர்கள் தான் என்பதை மறந்துவிடுகிறோம்.
மனித இனத்தின் அமைதிக்காக உருவாக்கப்பட்ட சித்தாந்த அடிப்படைகளுக்கு கீழ் பயணிக்கும் இம்மதத்தை வளர்க்க ஒரு இனத்தையே அழித்து தான் வளர்க்கவேண்டும் என்றால்,இந்த மதம் உருவாக்கப்பட்ட காரணமே மாறிப் போகிறதே…

புத்தன் வாழ்க்கையின் துக்கங்களைக் கண்டு துறவியாய் மாறி உலக அமைதிக்காக போராட தொடங்கிய ஒரு உன்னதமான போராளி. ஆனால் அவர் தத்துவங்களை ஏற்பவர்கள் ஏன் தீவிரவாதியானார்கள் என்று தான் எனக்கு விளங்கவில்லை..


இந்துவோ
இஸ்லாமியரோ
தமிழரோ
ஆப்பிரக்கரோ
அனைவரும் மனிதர்
அனைவரும் ஒன்றே.

உலகம் ஒன்று கூடி அமைதிக்காக உரக்க குரல் கொடுத்தால்
பணியாதா மியான்மர் ??
பணியும் என்ற ஒரு நம்பிக்கை தான் இந்த பதிவு.


மனிதம் எங்கே ??



Saturday 16 May 2015

உரக்கச்சொல்வோம் உலகுக்கு..!!























உன் உடல் மறித்து
வீரிய உரமாகி
அதில் எங்கள் குருதி தெளித்து
பல மரங்களாய் நீ உயிர் பெறுவாய் எம் ஏந்தலே

மலை,கடல் தாண்டி மாளாமல்
மனிதம் வளர்க்க உழைக்கும்
ஒவ்வொரு தமிழருக்கும்
தலைவன் நீ தான்

பச்சிளம் மழலைகளை மண்ணில் புதைக்க செய்தோன்
வடிவிடை பெண்கள் வடிவை சிதைத்தோன்
உயிர் கொடுத்த தாய் முலை அறுத்தோன்
இதை இழைத்தோன் உடல் உதிரம் பார்க்கா வரை
எம் விழியிரண்டும் உறங்காது தலைவா,

உன் புறமுதுகில் சுட்டு பேடிகள்
உன் உயிர் பறித்தன
நேருக்கு நேராய் நெற்றியில் சுடவே
தைரியமில்லா தேவிடியாள் மகனவன்
கிடைத்தால் போதும் குருதி தெறிக்க கொல்வேன்

அன்பிற்கு இடமில்லை
அமைதிக்கோ அனுமதியில்லை
அன்றோ
உரிமைக்கு குரலுண்டு
வலிமைக்கு உடலுண்டு

களையறுக்க மீண்டும் எழுவோம்
உடன் அணைக்க தலைவன் உயிர்த்தெழுவான்
இரு ’’கருணா’’ துரோகத்தால்
ஈழக்கனவு இருளாது

வீரநடை வீற்றெழுவோம்
விடுதலை அடைந்திடுவோம்
அண்ணல் பிரபாகரன் துணையிருக்கு-இதை,
உரக்கச் சொல்வோம் இவ்வுலகுக்கு!!!









Saturday 9 May 2015

சல்மான்..




தவறுற்று மனம் வருந்தி திருந்தி வாழும் நேரத்தில் தான்
இறைவன் என்பரோ இயற்கை என்பரோ
இதில் ஏதோ ஒன்று
நம் வாழ்க்கையில் ஒரு தேர்வை நடத்திடும் போல
இதில் நாம் எடுக்கும் ஒரு முடிவு தான்,
நம்மை நாம் திருத்திக்கொண்டோமா ? இல்லையா? என்பதற்கான ஒரு விடையும் வாழ்க்கைக்கான நிதர்சனமான உண்மையும் விளங்கும்.

தன் வாழ்க்கையில் இருந்து தானே வாழ்க்கையை கற்றுக்கொள்பவனே
ஞானி என்பர். நம்முள் எத்தனை பேர் ஞானி என்பது தெரியவில்லை.
ஆனால் பிறரின் வாழ்க்கை கண்டு கற்றுக்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனாகத்தான் இக்கட்டுரை வரைகிறேன்.

சல்மான் கான்,
இந்திய திரையுலகின் ஒரு முக்கிய நட்சத்திரம்.
தான் செய்த தவறுகளெல்லாம் கழிந்திட பல்வேறு நல காரியங்கள் செய்து திருந்தி வாழும் ஒரு தருவாயில் தான் இயற்கை தன் தேர்வை நிகழ்த்தியது.

தீர்ப்பு வெளிவந்தது.

ஐந்தாண்டுகள் சிறை தண்டனை.

இதை கண்டித்து அவரது ரசிகர்கள்.

உடனடியாக இரண்டு நாட்களுக்கு பெயில்.

இரண்டு நாட்கள் கடந்தன,
தான் சுமந்து கொண்டிருக்கும் செல்வாக்கின் காரணமாக
தீர்ப்பு தள்ளுபடி.

இயற்கை நடத்திய தேர்வில் தோல்வி கண்டார் சல்மான்.
காரணம்,
உண்மையில் மனிதராக (Being human) இருந்திருந்தால்
தனக்களிப்பட்ட தண்டனையை ஏற்றிருப்பார்.
ஆனால்,
அந்த ஒரு நிமிடம் அதை செய்திடாமல் மீண்டும்
தவறான பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்க உள்ளார்.

மொத்ததில்,
சல்மான்-மதிப்பு கூட்டப்பட்ட ஒருவரின் மதிப்பு கழிக்கப்படும்., இவரது இச்செயலினால்.


இது போல நம் வாழ்விலும்
இயற்கை சில தேர்வுகளை நிகழ்த்தும்,
அதில்,
தர்மத்தையும்,
சத்தியத்தையும்,
அன்பையும் நோக்கிய முடிவுகளே நம்மை மனிதத்தின் அடையாளங்களாக
நம்மை இயற்கை

அங்கீகரிக்கும்.


அன்பே சிவம்!!!




ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...