Sunday 13 December 2015

கன்னத்தில் முத்தமிட்டாய்....


















சிசுவாய் ஒளிந்துக்கொண்டு
உன் உணவினை திருடி உண்பேன்
தூக்கத்தை திருடிச்செல்வேன்

உனக்கு பிடித்த எதையும்
செய்ய விடமாட்டேன்
மீறி செய்தால் தண்டனை தருவேன்

உன்னுள் இருக்கையில் என்னவொரு
உணர்வாய் இருப்பினும்
உன் வயிர் உதைத்தே உரைப்பேன்

உலகை கானும் ஆசை வந்ததும்
உன் எலும்பை முறித்து
உடலில் உள்ள அனைத்தையும் துன்புறுத்தி
குருதி தெறிக்க வன்முறை செய்தே
உன் உடல் கிழித்து வெளிவந்தேன்

இதன் பிறகும்,
ஏனடி என்னை
உன் கையில் தந்தவுடன்
கண்ணீர் மல்க
கன்னத்தில் முத்தமிட்டாய்…….



6 comments:

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...