Saturday 5 November 2016

சாயி! சாயி!



























பிச்சையெடுத்து உண்ட மகான்
பளிங்கு சிலையில்
பள பள உடையில்
வைரத்தில் கிரீடமென
பணக்காரக் கடவுளானார்

வியாழக்கிழமையென்றால்
வழியெல்லாம் மகிழுந்து
 ஹாரன் சத்தத்தில்
ஆக்ஸிஜன் இல்லா நெருக்கடியில்
அவர் பாதம் நோக்கி ஒடுகின்றனர்
அத்தனை மக்களும்

அவர் போல மனிதனாய் வாழ்ந்துவிட்டு
போனாலே பூவுலகம் எங்கும்
புன்னகை மலரும்

மகான்களுக்கு மார்க்கெட்டிங் எதற்கு ?
மனதில் அவரை நிலைக்கச்செய்தால்
அதைவிட இறைபக்தி
எதுவும் இல்லையே…

சாயி! சாயி!

No comments:

Post a Comment

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...