Monday 24 October 2016

கண்ணம்மாவின் காதல்



















கயல்விழி கதைச் சொல்ல
முயல் பற்கள் மொழி பேச
கனியமுதிதழால் உன்னை
களவாடிச் சென்றிடுவேன்

பிறைநிலவு புன்னகையும்
பின்னிய குழலழகும்
பின் நின்று நீ அணைக்க
என் காதணியும் வெட்கமுறும்

கருநிறத்து முரடன் உந்தன்
நிறம் பூசாது நான் இருந்தால்
நாணத்தில் என் கண்கள்
நயமாக தெரியாது

உத்தம பொய்கள் பல உண்மையறிந்தும்
கேட்டிடுவேன்
உன் விருப்பு வெறுப்பனைத்தறிந்தும்
சீண்டிடுவேன்
செல்ல ஊடல்களுக்கு அடிக்கல்
நாட்டிடுவேன்
கண்ணம்மா என நீ அழைத்தால்
குழந்தையாக 
மாறிடுவேன்





No comments:

Post a Comment

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...