Friday 14 October 2016

நான் ஏன் பிறந்தேன் ?


















வயிற்றுக்குள் பிரண்டவனை
மார்ச்சூட்டில் புதைத்துக்கொள்ள
அவள் மனமும் ஏங்க

உடல் முழுதும் நோக
தலைகீழாய் பிரசவித்தாள்
தனயன் எனையை

வெளிச்சம் என் விழி கூச
விந்தை மனிதரைக் கண்டு
விழியால் வினவினேன்
நான் ஏன் பிறந்தேனென்று

மீசை மயிர் குத்த
வன்முறை முத்தமிட்டு
உச்சிமுகர்த்தான் தகப்பன்

நெகிழ்ச்சியில் அனைவரும்
பூரிப்பில் பெற்றவளும்
பெருமையில் பெற்றவனும்

இத்தனை அன்பு நிறைந்த
இன்பத்தை மொத்தமாய்
அவர்களுக்களித்தது
என்னுடைய பிறப்பு

நான் ஏன் பிறந்தேனென்ற வினாவிற்கு
அவனின் முத்தமும்
அவளது மார்ச்சூடும்
அவர்களது அன்பும்
பதிலாய் அமைந்தனவே..




No comments:

Post a Comment

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...