Saturday 7 November 2015

அவளும்... மழையும்...

மேகங்கள் கண் மையிட்டு
மண் வாசம் நாசி தொட்டு
மனதோடு மேளமிட்டு
எனை வந்து நனைக்கிறது
யான் காண ஏங்கும்
என்னவள் போல் மாமழையும்

என் இதயத்தின் காதல் நீரோடை
உட்கொண்ட-உன் இதயமுகில்கள்
பாரம் தாங்க இயலாமல்-என் மீதே
காதல் மழையாய்  பெய்ததடி காதலியே

மனிதனை மந்தமாக்கி
உலகை இரசிக்கச் செய்வதில்
மனதை மயக்கச் செய்வதில்
காதலும் மழையும் ஒன்றே

அன்பும் இறையும்
அவளும் மழையும்
இவையே போதும்

இவண் வாழ்ந்திடவே!!






No comments:

Post a Comment

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...