Sunday 12 November 2017

ஆறுவது காதலும் தான்…


காய்ந்த நிலமாக நான்
எனை நிரப்பும் நீராகிய அவள்
நிறை நிரப்பி இவ்வுறவை
நயம்பட நதியாக்கினாள்

அலைகின்ற மீன்கள் தான்
என்னுடைய காதல் என்பேன்
உனை நீங்கி விட்டால்
உயிர்த்தெழுவதில்லை

ஆழத்தில் மணல் போல
இன்பங்கள் சேர்த்தோம்
அகிலத்தின் அழகினை
பிரதிபலிப்பு செய்தோம்

எங்கள் உறவில்- அவளை
உறிவதற்கு சிலர்
உபயோகித்து உறவை
அசுத்தம் செய்ய சிலர்

அவளின் பாதுகாப்பென
சொல்லி அணை நிறுவினர்
வற்றிப்போய் வாடும்
காய்ந்த நிலமாக நான்

வற்றி நின்றேன்
வெயிலில் காய்ந்தேன்
உணர்ந்தேன்
நீர் அவள் அல்ல
காதல் தான் என்று

நிலம் நிரப்ப எண்ணி
கட்டிடம் கட்ட வேண்டாம்
எங்கேனும் ஊற்றடுத்து
எவளேனும் சேர்ந்திடுவாள்

ஆறுவது காதலும் தான்…




No comments:

Post a Comment

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...