Saturday 8 April 2017

பார்க்காமலேயே..



உணர்வெல்லாம் நினைவொன்றின்
துணையுடனே கடந்திட்டேன்
கொடிய முதுமையை
கைத்தடிக்கொண்டு கடந்திட்டேன்
கண் மூடும் நேரமது நெருங்கி
வருதலை உணர்ந்திட்டேன்

மூச்சிரைக்கும் நேரத்தில்
கை பிடித்த மருத்துவரின்
கண் நோக்கிய போதுதான்
பேச்சுரைந்து போனதம்மா
சாகும் முன்னே பார்த்துவிட்டேன்
கண்ணம்மாவின் கண்களை மீண்டும்

நின் உடல் மட்டும் தான் எவர்க்கோ
உயிர் என்றும் எனக்குத்தான்என
கர்வத்துடன் உயிர் பிரிந்தேன்
மெட்டியில்லா அவள் கால் விரல்களை
பார்க்காமலேயே..



No comments:

Post a Comment

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...