Tuesday 15 March 2016

தோற்றே போகிறான்..












எம் மொழி பேசும்
எந்தமிழன் மாண்டிட தோள் கொடுத்து
துணையிருந்தாய்,

எம் மீனவ உடன்பிறப்புகளை
பிற நாட்டவன் கொன்றொழிக்கையிலும்
அமைதிக் கொண்டாய்,

எம் நாவில் எமக்கு
விருப்பமில்லா வேற்று மொழியை
திணிக்க முற்பட்டாய்,

உன் முயற்சிகள்
வீண்போக எம் மண்ணையே
புறம் தள்ளினாய்,

எம் மண்ணின் வளங்கள் அழிந்திட
எம் இனத்தின் துரோகிகளோடு கைகோர்த்து
எண்ணற்ற திட்டம் அமைத்தாய்,

இவையெல்லாம் எதிர்த்து குரல் கொடுத்தால்
இறையாண்மைக்கு எதிரானவன் என
சிறை தள்ளி புறமுதுகில் மிதித்தாய்,

இதன் பிறகும் எங்கேனும்,
இந்நாட்டின் கீதத்தை கேட்கையிலே
மயிர் கூச்செழுந்திட
உடல் தானாய் நிற்க
உணர்வுகள் மாற்றம் கொள்ள
உதடுகள் வங்காள மொழிக்கு
வாயசைக்க

ஒரு நிமிடம்,
இத்தமிழன் தோற்றே போகிறான்
இந்தியனிடம்…


No comments:

Post a Comment

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...