Tuesday 7 April 2015

எனை பெற்றானே...




உன் காதல் சான்றாய் சுரந்த
விந்தில் வென்ற ஒன்றே நான்
உன்னவளின் கறுவரையில்
வீடுற்று வெளிவந்தன்

எனக்கொரு மகன் பிறப்பான்
என்னை போலவெ இருப்பான் என்ற பாடல் போல
உனை போலவே உருவெடுத்து
உலகினை காணக்கண்டேன்.

எதை உனக்கு நான் தருவேன்
அனைத்தையும் எனக்கு நீயே தந்தாய்
அதனால் தானோ தமிழில்
எந்தைக்கு மறுசொல் தந்தை

அகவைகள் பல கடக்க
உடன் நானும் வருகிறேன்
இறைவனும் இயற்கையும் உன்
உடனிருக்க நானும் இருப்பேன்

எனக்கு வாழ்வளித்த என்
முதல் ஆண் காதலே
என் காதலின் சான்றாக உன்
பெயரேந்தி வருவான் உன் பெயரனும்

அவனையும் உன் தோள் சுமக்க நேரும்
வலுவான உடலும் மனதும் வேண்டும்- எனவே
உழைத்தது போதும், உடன் வருவேன்
உன் பாரம் சுமக்க

எனை பெற்றானே
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!



அன்புடன்,
கார்த்திக் சம்பந்தன் பழனியப்பன்.

No comments:

Post a Comment

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...