Monday 2 March 2015

எது ஆன்மீகம் ??



இறை என்ற இயற்கையையுணர
திசைதோறும் நீ தேடாவிடில்
இருப்பதும் இல்லாமல் போகும்
இல்லாததும் இருப்பதாய் தோன்றும்

திரை விலக்கி தீபம் காட்ட
அனைவரும் கண் பிளக்க
அடடா!! இறைவன் என்போர்
இமை விரித்து இறைவன் இவன் தான்
எனும் குருட்டு நம்பிக்கை கூடாதென்பேன்

தேடல் இல்லையெனில்
தாகம் இல்லையெனில்
இப்பிறப்பினை உணர்ந்திட
தேகம் இருந்தும் பயனில்லை

பகுத்தறிவில் இறைவனை கண்டால்
அவனே இறைவன் என்பேன்
அகமிருந்து அன்பு செய்தால்
அதுவென்பதே ஆன்மீகம் என்பேன்…. 



No comments:

Post a Comment

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...