Friday 8 June 2018

காலா எனும் இராவண காவியம்🖤❤️💙











(Pic.Courtesy:- Erumai Made FB)

​காலாவை வெறும் படமாக கடந்து செல்ல முடியவில்லை. காலா ஒரு பிரகடனம்.
பேசவே மறுக்கப்பட்ட ஒரு அரசியலின் திரை வடிவம் தான் காலா.

காலம் காலமாக
காலாவதியான கட்டுப்பாடுகளையும்
வார்ப்பு வகைமையையும்(Stereotypes)
கட்டுடைத்து பேசிய அரசியல் தான் காலா.

ஹரி தாதாவின் கால்களை தொட்டு கும்பிட்டு போ என்று அவர்களின் சுயமரியாதையை உரசிப் பார்த்ததும் அங்கிருந்த அவர்கள் நகர்ந்த பின்னர்,
மாலை அணிவிக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலைக்கு அருகில் அவர்கள் நிற்பது போலவும்,

தெருவில் போகும் யாரோ ஒரு பெண்மணி,
*இவனுங்களுக்கு இந்த மாறி அசிங்கப்பட்டா தான் புரியும், சொன்னா'லாம் புரியாது* என்று கடந்து செல்வதும் நுட்பமான அரசியல் பாடம்.

காலா அம்பேத்கர், பெரியார் அரசியலையும்,

ஜரீணா காந்தியின் அரசியல் சாயலையும்(பல பேர் முரண்படலாம், ஆனால் இது என் Interpretation மட்டுமே)

ஹரிதாதா ஆதிக்க அதிகார வர்க்கத்தின் அரசியல் சாயலையும் சுற்றி கதை சுழல்வது எங்கோ சிலிர்க்க செய்து கொண்டே இருக்கிறது.

பராசக்தி, இரத்தக்கண்ணீர் ஒரு அரசியல் உரையாடலை மக்களிடையில் திறந்த வெளியில் அக்காலக்கட்டத்தில் கொளுத்திப்போட்டது. அவை இரண்டும் அன்றைய அரசியல் சூழலில் மிக நுட்பமாக கவனிக்க வேண்டிய இரண்டு படங்கள். திராவிட கொள்கையின் பிரகடனம் அவை இரண்டுமே.

காலா தற்காலச்சூழலில் மிக முக்கியமான பிரகடனம்.
கருப்பும்,சிகப்பும்,நீலமும் இந்த மனிதர்களின் மீது படர்ந்த பின்னர் ஒட்டுமொத்த சமூகமும் பல்வேறு வண்ணங்களாய் ஜொலிக்கும் காட்சி,
திரை வடிவத்தில் மிக நுட்பமான அழகியல் தன்மையான ஓவியம்.

ஒத்த வார்த்தையில சொல்லனும்னா,
காலா எங்களோட
இராவண காவியம்❤️

இந்த மானுடத்தின் மனித மாண்பை மீட்டெடுப்பதற்கான ஒட்டுமொத்த,
நில அரசியல், நிற அரசியல், அதிகாரவர்க்கத்திற்கு எதிரான அரசியல், ஆதிக்க வர்க்கத்திற்கு எதிரான அரசியல், சுயமரியாதை அரசியல் என்று மாண்பை மீட்டெடுக்க ஆயுதமாய் இருக்கும் அத்தனை அரசியலையும் இந்த சமூகத்திற்கு காட்சி வடிவில் பிரகடனபடுத்திய தோழர் இரஞ்சித்திற்கு நன்றிகள்.

தான் தேர்ந்தெடுத்த அரசியல் இது இல்லை என்று தெளிவாய் தெரிந்த பின்பும் இந்த அரசியலை காட்சிமயமாக மாற்ற வேர்ற லெவல்'ல நடித்திருக்கும் ரஜினிக்கும் பெரும் நன்றிகள்.

காலா எனும் இராவண காவியம்🖤❤️💙🖤❤️💙🖤❤️💙🖤❤️💙


No comments:

Post a Comment

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...