Thursday 2 June 2016

*இசைஞானி*















செல்வத்தில் சிறப்பாம் செவியென
சொன்னான் எம் மறையின் ஆசான்
வள்ளுவப் பெருந்தகை
அச்செவியினையே மகிழ்வுறச் செய்யும்
செந்தமிழிசையோ சிறு மானிடன் உருவில்
இம்மண்ணிற்கு வருகை

பிரச்சினைகள் பல இருப்பினும்
படுக்கை செல்கையில்
இவன் இசை அருகிருந்தால்
இன்பமாய் இதயமும் நிறைந்திடும்

மனையாளின் கோவம் தீர்க்க
மந்திரங்கள் தேவையில்லை
*மண்ணில் இந்த காதல் அன்றி* என
மண்டியிட்டு அவள் கைபிடித்தால்
மஞ்சம் சேர்ந்திடலாம், மன்னிப்பும் வழங்கப்படும்

சீரிய தைரியமும்
சித்தமும் இசையென வாழும்
சித்தன் நீயே!
அழியா இசையை பாமரனுக்கும்
அளித்தருளும் அண்ணலே-உனது

அடியேனின் அன்பு வாழ்த்துக்கள்…

No comments:

Post a Comment

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...