Saturday 16 May 2015

உரக்கச்சொல்வோம் உலகுக்கு..!!























உன் உடல் மறித்து
வீரிய உரமாகி
அதில் எங்கள் குருதி தெளித்து
பல மரங்களாய் நீ உயிர் பெறுவாய் எம் ஏந்தலே

மலை,கடல் தாண்டி மாளாமல்
மனிதம் வளர்க்க உழைக்கும்
ஒவ்வொரு தமிழருக்கும்
தலைவன் நீ தான்

பச்சிளம் மழலைகளை மண்ணில் புதைக்க செய்தோன்
வடிவிடை பெண்கள் வடிவை சிதைத்தோன்
உயிர் கொடுத்த தாய் முலை அறுத்தோன்
இதை இழைத்தோன் உடல் உதிரம் பார்க்கா வரை
எம் விழியிரண்டும் உறங்காது தலைவா,

உன் புறமுதுகில் சுட்டு பேடிகள்
உன் உயிர் பறித்தன
நேருக்கு நேராய் நெற்றியில் சுடவே
தைரியமில்லா தேவிடியாள் மகனவன்
கிடைத்தால் போதும் குருதி தெறிக்க கொல்வேன்

அன்பிற்கு இடமில்லை
அமைதிக்கோ அனுமதியில்லை
அன்றோ
உரிமைக்கு குரலுண்டு
வலிமைக்கு உடலுண்டு

களையறுக்க மீண்டும் எழுவோம்
உடன் அணைக்க தலைவன் உயிர்த்தெழுவான்
இரு ’’கருணா’’ துரோகத்தால்
ஈழக்கனவு இருளாது

வீரநடை வீற்றெழுவோம்
விடுதலை அடைந்திடுவோம்
அண்ணல் பிரபாகரன் துணையிருக்கு-இதை,
உரக்கச் சொல்வோம் இவ்வுலகுக்கு!!!









2 comments:

  1. தமிழ்க் குடும்பங்களுக்கு சமர்ப்பணம் !!
    அருமை நண்பா !!

    ReplyDelete

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...